நாங்குநேரி சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர் ராஜிநாமா முடிவு
நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாக காங்கிரஸ் உறுப்பினர் தெரிவித்தார்.
நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாக காங்கிரஸ் உறுப்பினர் தெரிவித்தார்.
2019 மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் கன்னியாகுமரி தொகுதியில் ஹெச்.வசந்தகுமாா் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
இந்நிலையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா். பின்னா் செய்தியாளா்ளைச் சந்தித்தபோது கூறியதாவது:
Advertisement
Advertisement
மக்களவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டுள்ளதால், நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்ய உள்ளேன் என்றார்.
ஒரே உறுப்பினா் இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது என்பதால் ஹெச்.வசந்தகுமார், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.