நாகூர் சில்லடி தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்
நாகூர் சில்லடி தர்கா 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
நாகூர் சில்லடி தர்கா 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
நாகூர் ஆண்டவர் 40 நாள்கள் தவமிருந்த புனித இடமான நாகூர் கடற்கரையில் சில்லடி தர்கா நிறுவப்பட்டுள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டில் நடைபெறும் 462- ஆவது ஆண்டு கந்தூரி விழா செப்டம்பர் 30-ஆம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து, கடந்த 10 நாள்களாக சில்லடி தர்காவில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை இரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தையொட்டி மாலை 6.30 மணியளவில் நாகூர் தர்கா பரம்பரை கலீபா மஸ்தான் சாகிபு காதிரி தலைமையில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. பின்னர் இரவு 9.30 மணியளவில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. நாகூர் தர்காஅலங்கார வாசலிலிருந்து புறப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சில்லடி தர்காவை வந்தடைந்தது.
தொடர்ந்து நடைபெற்ற தொழுகைக்குப் பின்னர் சந்தனம் பூசப்பட்டது. இதில், திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, நாகூர் தர்கா நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.