மோடி வேண்டுகோளின்படி தனது வீட்டில் மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி வேண்டுகோளின்படி போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் மெழுகுவர்த்தி ஏற்றி கைகளில் ஏந்தினார்.
சென்னை: பிரதமர் மோடி வேண்டுகோளின்படி போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் மெழுகுவர்த்தி ஏற்றி கைகளில் ஏந்தினார்.
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கரோனாவுக்கு எதிரான நமது வலிமையை உணா்த்தும் விதமாக, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு விளக்கு அல்லது மெழுகுவா்த்தியை ஏற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமையன்று விடியோ செய்தி மூலமாக அழைப்பு விடுத்தாா்.
பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு இணங்க ஞாயிறு இரவு சரியாக ஒன்பது மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளிலும், கட்டங்களிலும் ஒளியேற்றினர்.
Advertisement
Advertisement
அவர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் வெளியே வந்து மெழுகுவர்த்தி ஏந்தினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.