ராமநாதபுரத்தில் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அங்கு பெண் குழந்தைக்கு பெயர் சூட்டினார்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அங்கு பெண் குழந்தைக்கு பெயர் சூட்டினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.. பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
தனது சொந்தத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பழனிசாமி, இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சத்ரக்குடி என்ற இடத்தில் தங்களது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அப்பெண் குழந்தைக்கு சுதா என்று பெயர் சூட்டினார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.