முதுமலையில் உடல்நலம் பாதித்த யானை சாலையை அடிக்கடி மறிப்பதால் வனத்துறை திணறல்
முதுமலை புலிகள் காப்பகத்தில் முதுகில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை வனத்துறையினர் கும்கிகள் உதவியுடன் பிடித்து சிகிச்சையளித்து காட்டிலேயே விட்டுவிட்டனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் முதுகில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை வனத்துறையினர் கும்கிகள் உதவியுடன் பிடித்து சிகிச்சையளித்து காட்டிலேயே விட்டுவிட்டனர்.
அந்த ஆண் யானை பொக்காபும் வனத்தை விட்டு வெளியே வந்து மசினகுடி - உதகை சாலையை வழிமறித்து நிற்கிறது. இதனால் வாகனங்கள் சாலையில் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றன. தகவல் கிடைத்தவுடன் வனத்துறை ஊழியர்கள் சென்று காட்டுக்குள் விரட்டுகின்றனர். ஒரு நாளைக்குப் பல முறை சாலையின் குறுக்கே வந்து நிற்பதால் வனத்துறைக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக வன ஊழியர்களை வைத்து யானையைக் கண்காணித்த சிங்கார வனச்சரக அலுவலர் காந்தனிடம் இதுகுறித்து கேட்டபோது, அந்த யானை சிகிச்சையளித்த பிறகு தான் சாலையில் வந்து நிற்கிறது.
Advertisement
Advertisement
மதங்களை யோ சாலையில் செல்லும் வாகனங்களையோ ஒன்றும் செய்வதில்லை. யானை சாலையின் குறுக்கே நிற்பதைக் கண்டால் வனத்துறைக்குத் தகவல் கொடுக்க வேண்டும். யானையிடம் அத்துமீறுவதோ உணவளிப்பதோ தண்டனைக்குரிய செயலாகும். அதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.