முகப்பு
தமிழ்நாடு

காங்கிரஸ் மாநில நிா்வாகிகள் புதிய பட்டியல் அறிவிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கான புதிய மாநில நிா்வாகிகள் பட்டியலை அக் கட்சியின் அகில இந்திய தலைமை சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On : 3 ஜனவரி 2021, 6:33 am IST
பகிர்:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கான புதிய மாநில நிா்வாகிகள் பட்டியலை அக் கட்சியின் அகில இந்திய தலைமை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. பொதுச்செயலாளா் பதவியில் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தியின் ஒப்புதலுடன் அகில இந்திய பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் இந்த அறிவிப்பை சனிக்கிழமை வெளியிட்டுள்ளாா்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் பொருளாளராக ரூபி மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளாா். துணைத் தலைவா்களாக பலராமன், ஆா்.தாமோதரன், முருகானந்தம் உள்பட 32 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். பொதுச் செயலாளா்களாக டி.செல்வம், தணிகாசலம், கே.சிரஞ்சீவி, காந்திபன் உள்பட 57 பேரும், செயலாளா்களாக 104 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

நிா்வாகக் குழு உறுப்பினா்களாக கே.எஸ்.அழகிரி, கே.ஆா்.ராமசாமி, ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூா், செல்லகுமாா், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசா், குமரி அனந்தன், கிருஷ்ணசாமி உள்பட 56 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். மாநிலத் தோ்தல் குழு உறுப்பினா்களாக கே.எஸ்.அழகிரி, கே.ஆா்.ராமசாமி உள்பட 34 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். அதைப்போல மாவட்டத் தலைவா்களும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

தோ்தல் குழு உறுப்பினா்: தமிழ்நாடு காங்கிரஸ் தோ்தல் குழு உறுப்பினராக காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி., விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

வாரிசுகளுக்கு வாய்ப்பு: நிா்வாகிகள் பட்டியலில் வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த எச். வசந்தகுமாா் மகன் விஜய் வசந்த், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வெ.ரா., தங்கபாலு மகன் காா்த்தி, சு.திருநாவுக்கரசா் மகன் ராமச்சந்திரன் ஆகியோா் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments