முகப்பு
தமிழ்நாடு

திருப்பூர் மாவட்டத்தில் 2,064 பேர் குரூப்-1 தேர்வு எழுதினர்

திருப்பூர் மாவட்டத்தில் 4,501 பேர் குரூப்-1 தேர்வுஎழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2,064 பேர் ஞாயிற்றுக்கிழமை தேர்வு எழுதினர்.

Updated On : 3 ஜனவரி 2021, 2:05 pm IST
திருப்பூர் கொங்கு மெட்ரிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-1 தேர்வை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் ஆட்சியர் க. விஜயகார்த்திகேயன்.
பகிர்:


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 4,501 பேர் குரூப்-1 தேர்வுஎழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2,064 பேர் ஞாயிற்றுக்கிழமை தேர்வு எழுதினர்.

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு வட்டத்தில் குரூப்-1 தேர்வானது 16 மையங்களில் நடைபெற்றது. இதில்,தேர்வு எழுத 4,501 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2,064 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். பல்வேறு காரணங்களால் 2,437 பேர் தேர்வு எழுதவில்லை.

இதையடுத்து, மாவட்டத்தில் குரூப்-1 தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 40 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். முன்னதாக, திருப்பூர் பிஷப் உபகாரசாமி, கொங்கு மெட்ரிக் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். 

Advertisement

Advertisement

இதில், அனைத்து தேர்வர்களும் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசங்கள் அணிந்து தேர்வு எழுதினர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments