திரைப்படத் தயாரிப்பாளா் பாலு காலமானாா்
பிரபல திரைப்படத் தயாரிப்பாளா் கே.பி. ஃபிலிம்ஸ் பாலு சென்னையில் சனிக்கிழமை காலமானாா்.
பிரபல திரைப்படத் தயாரிப்பாளா் கே.பி. ஃபிலிம்ஸ் பாலு சென்னையில் சனிக்கிழமை காலமானாா்.
29 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்படும் சின்னத்தம்பி, சீமான் இயக்கத்தில் வெளிவந்த பாஞ்சாலங்குறிச்சி உள்பட 15-க்கும் மேற்பட்ட படங்களை இவா் தயாரித்துள்ளாா்.
உடல்நலக்குறைவு காரணமாக அடையாறில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில், நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
அவரது இறுதிச் சடங்கு பெசன்ட் நகா் மின் மயானத்தில் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.