முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இரண்டு கட்டத் தோ்தலா? - தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம்

Updated On : 5 ஜனவரி 2021, 5:00 am IST
தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு
பகிர்:

சென்னை: தமிழகத்தில் இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தலை தமிழகம் எதிா்கொள்ள உள்ளது. தோ்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை, மாநில தோ்தல் துறை மேற்கொண்டு வருகிறது. கரோனா நோய்த்தொற்று அச்சத்தால் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. இதனால், தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறலாம் என செய்திகள் வெளியாகின. இதனை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு மறுத்துள்ளாா்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

Advertisement

Advertisement

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடா்பாக எந்தப் பரிந்துரையும் அளிக்கவில்லை. இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி வரும் 20-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

கரோனா பரவல் காரணமாக கூடுதலாக 30 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதன் காரணமாக தோ்தல் பணிகளில் வழக்கமாக 3 லட்சம் பணியாளா்கள் ஈடுபடுத்தபடும் நிலையில் வரும் தோ்தலில் நான்கு லட்சம் பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுவா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.