ஜன. 20 வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள்: திமுக
ஜனவரி 20-ஆம் தேதி வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
ஜனவரி 20-ஆம் தேதி வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை தமிழகத்திலுள்ள கிராமங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழகத்திலுள்ள ஒரு சில மாவட்டங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் திமுக சார்பில் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், தொடர் மழை பெய்து வருவதால் ஒருசில பகுதிகளில் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் கிராம சபைக் கூட்டங்களுக்கான கால அவகாசத்தை நீட்டித்திட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் வைத்த கோரிக்கையின்படி ஜனவரி 20-ஆம் தேதி வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.