முகப்பு
தமிழ்நாடு

ஜன. 20 வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள்: திமுக

ஜனவரி 20-ஆம் தேதி வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

Updated On : 7 ஜனவரி 2021, 2:35 pm IST
ஜன. 20 வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள்: திமுக (கோப்புப்படம்)
பகிர்:

ஜனவரி 20-ஆம் தேதி வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை தமிழகத்திலுள்ள கிராமங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழகத்திலுள்ள ஒரு சில மாவட்டங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் திமுக சார்பில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில், தொடர் மழை பெய்து வருவதால் ஒருசில பகுதிகளில் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்கள் கிராம சபைக் கூட்டங்களுக்கான கால அவகாசத்தை நீட்டித்திட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் வைத்த கோரிக்கையின்படி ஜனவரி 20-ஆம் தேதி வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.