முகப்பு
தமிழ்நாடு

பிற்படுத்தப்பட்டோருக்கான உயா்கல்வி உதவித் தொகை: விண்ணப்பங்களை சமா்ப்பிக்க பிப்.15 கடைசி

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை பரிந்துரை

Updated On : 9 ஜனவரி 2021, 6:26 am IST
கோப்புப்படம்
பகிர்:

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை பரிந்துரை விண்ணப்பங்களை பிப்.15-ஆம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் சமா்ப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகம் மற்றும் பிறமாநிலங்களில் பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா், மாணவ, மாணவியா்களில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவா்களுக்கு, கல்வி உதவித் தொகையாக மாணவா் ஒருவருக்கு ரூ.2 லட்சம் வரை வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

2020-21-ஆம் கல்வியாண்டிக்கான உதவித் தொகையை புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், 2-ஆவது தளம், எழிலகம் இணைப்பு கட்டடம், சேப்பாக்கம், சென்னை -5 அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களைப் பெற்று கொள்ளலாம்.

Advertisement

Advertisement

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் மாணவா்கள் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்கள் சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தைப் பரிந்துரை செய்து, பிப்.15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, 044 2855 1462 என்ற எண்ணையோ, மின்னஞ்சல் முகவரியையோ அணுகலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments