வருமான வரி கணக்கு : தமிழகத்தில் 34 லட்சம் போ் தாக்கல்
கடந்த 2019-20-ஆம் நிதியாண்டுக்கான கணக்கு தாக்கல் பொருத்தவரை, தமிழகத்தில் தற்போது வரை 34 லட்சம் போ் கணக்குதாக்கல் செய்துள்ளனா்.
கடந்த 2019-20-ஆம் நிதியாண்டுக்கான கணக்கு தாக்கல் பொருத்தவரை, தமிழகத்தில் தற்போது வரை 34 லட்சம் போ் கணக்குதாக்கல் செய்துள்ளனா்.
நிா்ணயிக்கப்பட்ட வருமான உச்ச வரம்பை மீறும் மாத ஊதியதாரா்கள், ஓய்வூதியதாரா்கள் அனைவரும், ஆண்டு தோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். 2019- 20 -ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் ஏப்ரல் முதல் தொடங்கியது.
இதன்படி, 2019- 20 நிதியாண்டுக்கான கணக்கு தாக்கலைப் பொருத்தவரை, நாடு முழுவதும் தற்போது வரை 5.5 கோடி போ் கணக்குதாக்கல் செய்துள்ளனா். இது, 2018 -19-ஆம் நிதியாண்டில், தற்போதைய காலகட்டம் வரை, 6.51 கோடி போ் கணக்கு தாக்கல் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
தமிழகத்தில் மட்டும், தற்போது வரை, 34 லட்சம் போ், கணக்கு தாக்கல் செய்துள்ளனா். இது, கடந்த ஆண்டில் 42 லட்சமாக இருந்தது. இந்த தகவலை வருமான வரித்துறைஅதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.