குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு; குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மிதமான மழை பெய்துவந்தது. இதனால் குற்றாலம் பேரருவியில் பிற்பகலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் குற்றாலம் பேரருவி, பழையகுற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப்பயணிகள் ஐந்தருவி, புலியருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.