முகப்பு
தமிழ்நாடு

தொடர் மழை: முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 4 அடி உயர்வு

முல்லைப் பெரியாறு அணையில் பலத்த மழை காரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒரே நாளில் அணையின்  நீர்மட்டம் 4 அடி உயர்ந்தது.

Updated On : 14 ஜனவரி 2021, 10:55 am IST
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பலத்த மழை ஒரே நாளில் 4 அடி நீர்மட்டம் உயர்வு
பகிர்:

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் பலத்த மழை காரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒரே நாளில் அணையின்  நீர்மட்டம் 4 அடி உயர்ந்தது.

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது, இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 122.25 அடியாகவும், அணைக்கு நீர் இருப்பு 3,074 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,315 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 700 கனஅடியாகவும் இருந்தது.

Advertisement

Advertisement

அன்று நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 126.40 அடி உயரமாகவும், அணைக்குள் நீர் இருப்பு 3,920 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 10 ஆயிரத்து 707 கன அடியாகவும் இருந்தது.

ஒரே நாளில் முல்லைப் பெரியாறு அணைக்குள்  நீர் வரத்து அதிகம் காரணமாக அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 8000 கன அடி தண்ணீர் வினாடிக்கு அணைக்குள் வரத்து வந்துள்ளது.

கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தற்போது நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், கம்பம் பள்ளத்தாக்கு உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments