அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளையுடன் வந்த 10-ஆம் வகுப்பு மாணவி
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக 10-ஆம் வகுப்பு மாணவி தமது காளையுடன் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக 10-ஆம் வகுப்பு மாணவி தமது காளையுடன் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழர் திருநளையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று காலை தொடங்கிய இந்த போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டு வாடிவாசல் வழியாக வரும் காளைகளை அடக்கி வருகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 780 காளைகள், 430 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதனிடையே மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி யோகேஸ்வரி, தமது காளையை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வந்தார்.
போட்டியில் கலந்துகொள்ள 'மட்டை' என்ற தனது காளையை வாடிவாசலுக்கு மாணவி அழைத்துச் சென்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.