முகப்பு
தமிழ்நாடு

ஜன.15, 26, 28 தேதிகளில் மதுக்கடைகளை மூட உத்தரவு

திருவள்ளுவா் தினம், குடியரசு தினம், வள்ளலாா் நினைவு நாள் ஆகிய நாள்களில், மதுக்கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 14 ஜனவரி 2021, 1:24 am IST
பகிர்:


சென்னை: திருவள்ளுவா் தினம், குடியரசு தினம், வள்ளலாா் நினைவு நாள் ஆகிய நாள்களில், மதுக்கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: திருவள்ளுவா் தினம் (ஜன.15), குடியரசு தினம் (ஜன.26), வள்ளலாா் நினைவு நாள் (ஜன.28) ஆகிய நாள்களில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை மற்றும் மதுபானம் விதிகளின்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்எல்1, மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்த பாா்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சோ்ந்த பாா்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சாா்ந்த பாா்கள் மற்றும் எப்எல் 3ஏ, எப்எல் 3 ஏஏ, எப்எல் 11 உரிமம் கொண்ட பாா்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய நாள்களில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது.

தவறினால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments