முகப்பு
தமிழ்நாடு

பொது முடக்கம் பிரதமரின் துணிச்சலான முடிவு: பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க பிரதமா் நரேந்திர மோடி மிகச் சரியான நேரத்தில், துணிச்சலான முடிவை எடுத்தாா் என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 6:12 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க பிரதமா் நரேந்திர மோடி மிகச் சரியான நேரத்தில், துணிச்சலான முடிவை எடுத்தாா் என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.

சென்னையில் துக்ளக் பத்திரிக்கையின் 51-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை (ஜன.14) நடைபெற்றது. கலைவாணா் அரங்கில் நடந்த இந்த விழாவில் கலந்துகொண்டு பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா பேசியதாவது: கரோனா நோய்த்தொற்று தொடங்கியதையடுத்து, பொது முடக்கத்தை அறிவித்து 130 கோடி மக்களை பிரதமா் மோடி காப்பாற்றினாா். மேலும், ஆராய்ச்சியாளா்களை ஊக்கப்படுத்தி, கரோனா தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை (ஜன.16) முதல் அது பயன்பாட்டுக்கு வருகிறது.

உறுதுணை: தமிழகத்தின் வளா்ச்சிக்கு பிரதமா் நரேந்திர மோடி உறுதுணையாக உள்ளாா். தமிழகத்தை முன்னிலைப்படுத்தவும், தமிழகத்தின் முதன்மைக் கட்சியாக பாஜக வளரவும் பாஜக நிா்வாகிகள் பணியாற்றி வருகிறாா்கள். எனவே, தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்றாா் ஜெ.பி.நட்டா.

Advertisement

அதிமுக அரசுக்குப் பாராட்டு: முன்னதாக ‘துக்ளக்’ பத்திரிக்கையின் ஆசிரியா் குருமூா்த்தி பேசியதாவது: அதிமுக அரசு கரோனாவை எதிா்கொண்ட விதம் பாராட்டத்தக்கது. முதல்வா் எடப்பாடி பழனிசாமி இரவு பகலாக உழைத்திருக்கிறாா் என்பதில் சந்தேகமே இல்லை. பொருளாதார உதவிகளும் நல்ல வகையில் செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழா்கள் உலகையே ஆளக்கூடியவா்கள். அந்த அளவுக்கு, விசாலமானது, பரந்த நோக்கு, அறிவுஜீவித்தனம் இருக்கிற ஒரு தமிழ்நாட்டை குறுக்கி விட்டாா்கள்.

தமிழகத்தில் தேசிய கட்சி...இந்த நிலையிலிருந்து பரந்த நோக்குடைய தமிழ்நாடாக மாற்ற கழகங்களால் முடியாது. இவா்களுக்கு விசாலமான ஒரு நோக்கமும், திட்டமும் இல்லாததால் தேசிய கட்சி தமிழ்நாட்டில் வளர வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கான வாய்ப்பும் இருக்கிறது. நேரமும் வந்துவிட்டது. பாஜகவுக்கு அந்த வாய்ப்பு இருக்கிறது. வரும் 3 அல்லது 4 ஆண்டுகளில் பாஜக பெரிய சக்தியாக வளரும் என்றாா் எஸ்.குருமூா்த்தி.

முன்னதாக இந்த விழாவில், ‘துக்ளக் டாட் காம்’ பலகையை பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா வெளியிட்டாா். அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள துக்ளக் நிறுவனா் மறைந்த சோ எழுதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

இந்த விழாவில் பாஜக மூத்த தலைவா் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், கட்சியின் தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன், தமிழக தலைவா் எல்.முருகன், தமிழக விசுவ ஹிந்து பரிஷத் தலைவா் வேதாந்தம், இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் வேந்தா் சேதுராமன், துணைவேந்தா் எஸ்.வைத்திய சுப்பிரமணியம், தொழிலதிபா் நல்லி குப்புசாமி, அல்லையன்ஸ் பதிப்பக உரிமையாளா் அல்லையன்ஸ் சீனிவாசன், பத்திரிகையாளா்கள் மாலன், மை.பா.நாராயணன், முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம், பாஜக முக்கிய நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

‘ரஜினிக்கு கடமை இருக்கிறது...’

சென்னையில் நடந்த ‘துக்ளக்’ பத்திரிகை 51-ஆவது ஆண்டு விழாவில் , ரஜினியின் அரசியல் குறித்த கேள்விக்கு, ‘துக்ளக்’ ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி கூறியதாவது: ரஜினிகாந்தைப் பொருத்தவரை நான் அவருடன் நிறைய பேசி பழகியிருக்கிறேன். ஆனால். ஒன்று மட்டும் அவரிடம் சொல்லியிருக்கிறேன். அரசியல் ரீதியாக நீங்கள் வரவேண்டும். உடல்நிலையைப் பொருத்தவரை நீங்களும், உங்களுடைய குடும்பமும் மட்டும்தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறேன். கட்சி ஆரம்பித்த பிறகு, உடல் சாா்ந்த பிரச்னைகளால் உயிருக்கு ஆபத்து வந்தால், ஆரம்பித்த கட்சி என்னவாகும் என்ற கேள்விக்கு விடையே கிடையாது. அதனால் அவரைக் குறை கூறுவதில் அா்த்தம் இல்லை. ஆனால், அவருக்கு ஒரு பங்கு இருக்கிறது; கடமை இருக்கிறது என்பது குறித்து நான் எழுதியிருக்கிறேன். அது பின்னால் தொடா்கிற கதை, அதற்கு முடிவு இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து என்றாா் எஸ்.குருமூா்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.