ஜல்லிக்கட்டு காட்சிகளுடன் தயாராகும் 'மருத': நடிகர் சரவணன்
அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை திரைப்பட நடிகர் சரவணன் பார்த்து ரசித்தார்.
மதுரை: அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை திரைப்பட நடிகர் சரவணன் பார்த்து ரசித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: நான் நடிக்கும் மருத திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புகழ்பெற்றது.
மதுரை மண்ணின் மனம் வீசும் திரைப்படம் என்பதால், மருத படத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகள் இடம்பெறுகின்றன.
Advertisement
Advertisement
நானும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்டு ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார்.
இதுவரை 3 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளது. 389 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. 5 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர்.