முகப்பு
தமிழ்நாடு

சேலம் மாவட்டம் காருவள்ளியில் எம்.ஜி.ஆர், அண்ணா சிலைகள் திறப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காருவள்ளியில் எம்.ஜி.ஆர், அண்ணா சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 17 ஜனவரி 2021, 8:34 am IST
காருவள்ளியில் எம்.ஜி.ஆர், அண்ணா சிலை திறப்பு விழா
பகிர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காருவள்ளியில் எம்.ஜி.ஆர், அண்ணா சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர் சேரன் செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் கலந்துகொண்டு எம்ஜிஆர் மற்றும் அண்ணா சிலையை திறந்து வைத்தார். பின்னர் , மலர் தூவி மரியாதை செலுத்திய , எம்.எல்.ஏ. வெற்றிவேல், கட்சியின் அடிமட்டத் தொண்டரும் உயர் பொறுப்புக்கு வர வேண்டும் என்கிற எம்.ஜி.ஆரின் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியமைக்க அதிமுக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில் முன்னாள் தொகுதி செயலாளர் ராமசந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சுப்ரமணி, கோவிந்தராஜ், காடையாம்பட்டி ஒன்றியக் குழுத் தலைவர் மாரியம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.