தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி: முதல்வர் தொடக்கி வைத்தார்
தமிழகத்திலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.
தமிழகத்திலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் கரோனா தடுப்பூசி மருத்துவர் சங்க மாநிலத் தலைவரும், மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவரான செந்திலுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Advertisement
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் டீன் சங்குமணிக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.