முகப்பு
தமிழ்நாடு

ஹஜ் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: சிறுபான்மையினர் நலத் துறை அறிவிப்பு

65 வயதைக் கடந்த அனைத்து ஹஜ் விண்ணப்பதாரர்களும் நடப்பாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளத் தகுதியற்றவர்கள் என்று  சிறுபான்மையினர் நலத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 12 ஏப்ரல் 2022, 9:22 pm IST
பகிர்:

65 வயதைக் கடந்த அனைத்து ஹஜ் விண்ணப்பதாரர்களும் நடப்பாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளத் தகுதியற்றவர்கள் என்று  சிறுபான்மையினர் நலத் துறை தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் தற்போதைய அறிவிப்பின்படி நடப்பாண்டில் (ஹஜ் 2022) ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சவூதி அரேபியா அரசாங்கத்தின் சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட கரோனாக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்பெற்ற 65 வயதிற்குட்பட்டவர்கள் தகுதியானவர்கள். 

Advertisement

Advertisement

ஹஜ் விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட
கரோனா, பி.சி.ஆர். பரிசோதனையில் நெகடிவ் என உறுதி செய்யப்பட்ட
மருத்துவச் சான்று உடையவர்கள் தகுதியானவர்கள்.

ஹஜ் கிரியைகளை நிறைவேற்றும்போது கடைபிடிக்கப்பட வேண்டிய
அனைத்து சுகாதாரம் சம்பந்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஹஜ் பயணத்தில் தவறாது கடைபிடிக்கவேண்டும்

ஏப்ரல் 30 2022 அன்றுள்ளவாறு 65 வயதைக் கடந்த அனைத்து ஹஜ்
விண்ணப்பதாரர்களும் ஹஜ் 2022க்கு தகுதியற்றவராவர். இதனால், பெண் பயணிக்கு ஆண் வழிதுணையாக விண்ணப்பித்த 65 வயதைக் கடந்த மெஹ்ரம் விண்ணப்பதாரர்கள் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.

30.04.2022 அல்லது அதற்கு முன்னர் 65 வயதை பூர்த்தி செய்யாத சவூதி
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்–19–க்கு எதிரான
தடுப்பூசிகளை செலுத்தியிருத்தல் வேண்டும்.

வயது தகுதியின்மை காரணத்தால் பெண் பயணிக்கு மெஹ்ரமாக ஏற்கனவே விண்ணப்பித்த இடத்திற்கு புதிதாக ஆண் வழித்துணையாக
விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments