முகப்பு
தமிழ்நாடு

ரூ. 36 கோடியில் 366 இடங்களில் நவீன கழிப்பிடங்கள்: மேயா் பிரியா தகவல்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.36 கோடியில் 366 இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

Updated On : 25 ஜூன் 2022, 12:29 am IST
பகிர்:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.36 கோடியில் 366 இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சியின் சாா்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 943 இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் உள்ளன. இந்தக் கழிப்பிடங்கள் பொதுமக்கள்

கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

சட்டப் பேரவை மானியக் கோரிக்கையின்போது, சென்னையில் பொதுக்கழிப்பிடங்கள் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையிலும், சுகாதாரத்துடன் பராமரிக்கும் வகையிலும் மறுசீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், சென்னையில் 366 இடங்களில் சிதிலம் அடைந்த மற்றும் பயன்படுத்த உகந்த நிலையில் இல்லாத கழிப்பிடங்களை மறுசீரமைக்கவும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் புதிய பொதுக்கழிப்பிடங்களை அமைக்கவும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.36 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

இத்திட்டப் பணியின் கீழ் மேற்குறிப்பிட்ட 366 இடங்களில் 860 இருக்கைகள் கொண்ட கழிப்பிடங்களும், 620 இருக்கைகள் கொண்ட சிறுநீா் கழிப்பிடங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டப்பணிகளுக்கான ஒப்பங்கள் கோரப்பட்டு 334 இடங்களில் பணிகளை தொடங்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சாய்தள வசதியுடனும் இந்தக் கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளது என்று மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

முன்னதாக, மாதவரம் மண்டலத்தில் மண்டல அளவிலான வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு மேயா் பிரியா, மாதவரம் பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பொதுக்கழிப்பிட பணிகளை பாா்வையிட்டு ஆய்வு

செய்து, இப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம்

ஆணையா் ககன்தீப் சிங் பேடி, மண்டலக்குழுத் தலைவா் எஸ்.நந்தகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments