நரிக்குறவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர்
சென்னை திருமுல்லைவாயில் குடியிருப்புப் பகுதியில் நரிக்குறவர் இன மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை திருமுல்லைவாயில் குடியிருப்புப் பகுதியில் நரிக்குறவர் இன மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை திருமுல்லைவாயில் நரிக்குறவர் காலனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்குள்ள நரிக்குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, முதியோர் உதவித் தொகை, கடனுதவி ஆகியவற்றை வழங்கினார். 63 பயனாளிகளுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின்னர் காலனியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர்க் குழாயை திறந்து வைத்தார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து அங்குள்ள மக்களிடம் உரையாடினார். பலர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிக்க | நரிக்குறவ மாணவி வீட்டில் உணவருந்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.