முகப்பு
தமிழ்நாடு

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமீறுபவர்கள் மீது நடவடிக்கை: காவல்துறை ஆணையர்! 

சென்னையில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். 

Updated On : 27 டிசம்பர் 2022, 1:22 pm IST
பகிர்:

சென்னையில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். 

சென்னை, கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ள நட்சத்திர விடுதி உரிமையர்களுடன் வருகிற 29-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாகவும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு வழிக்காட்டுதல்கள் குறித்து அறிவுறுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

புத்தாண்டு கொண்டாட்டங்களில் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.