முகப்பு
தமிழ்நாடு

சந்திரயான் -3 லேண்டர் தரையிறக்கம்: எங்கே நேரலையில் காணலாம்?

நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான் -3 விண்கலனில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் நாளை (ஆக.23) நிலவில் தரையிறங்கவுள்ளது. 

Updated On : 22 ஆகஸ்ட் 2023, 12:20 pm IST
பகிர்:


நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான் -3 விண்கலனில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் நாளை (ஆக.23) நிலவில் தரையிறங்கவுள்ளது. 

இந்த வரலாற்று நிகழ்வை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் நேரலை செய்வதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

தற்போது சந்திரயான் - 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட லேண்டா் கலன், நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்குள் பயணித்து வருகிறது.

Advertisement

Advertisement

மேலும்,  சந்திரயான் - 2 திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் சாதனம் சந்திரயான் -3 லேண்டருடன் தொடர்புகொண்டுள்ளது. இதனால், ஆர்பிட்டர் இதுவரை எடுத்த புகைப்படங்கள் மற்றும் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு லேண்டர் கலனை நிலவில் பத்திரமாக தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரமடைந்துள்ளது. 

ரஷியா அனுப்பிய லூனா -25 விண்கலம் தோல்வியில் முடிந்த நிலையில், சந்திரயான் -3 லேண்டர் தரையிறக்கம் உலக நாடுகளிடையேயும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக மாறியுள்ள சந்திரயான் -3 லேண்டர் கலன் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலை செய்யவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நாளை (ஆக. 23) மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறங்கவுள்ளது. 

இந்த நிகழ்வை இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைதளமான https://isro.gov.in என்ற தளத்திலும், இஸ்ரோ யூடியூப் பக்கத்திலும், இஸ்ரோ முகப்புத்தகப் பக்கத்திலும் நேரலையில் காணலாம். மேலும், டிடி நேஷனல் தொலைக்காட்சியிலும் நேரலை ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேரலை செய்யப்படும் இஸ்ரோவின் யூடியூப் பக்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments