முகப்பு
தமிழ்நாடு

சென்னை அண்ணா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ராயப்பேட்டை, அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 27) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Updated On : 26 ஆகஸ்ட் 2023, 10:31 am IST
கோப்புப்படம்
பகிர்:

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ராயப்பேட்டை, அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 27) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெள்ளிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

அண்ணாசாலை, ராயப்பேட்டை ஜி.பி. சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஆக.27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

இதன்படி ராயப்பேட்டை வெஸ்ட் காட் சாலையில் இருந்து வரும் மாநகரப் பேருந்துகள், கனரக வாகனங்கள், இதர வணிக வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே திருப்பி விடப்படும்.

இந்த வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம். இந்த வாகனங்கள் ஜி.பி. சாலை வழியாக அண்ணாசாலை செல்ல அனுமதி இல்லை.

இரு சக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் வழக்கம் போல் ஜி.பி. சாலை வழியாக அண்ணா சாலைக்குச் செல்லலாம்.

ஜி.பி. சாலை வழியாக அண்ணா சாலைக்கு அனுமதிக்கப்படும் இரு சக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் வலது பக்கம் திரும்பி டேம்ஸ் சாலை வழியாகச் செல்ல அனுமதி கிடையாது. இந்த வாகனங்கள் இடது பக்கம் திரும்பி ஸ்பென்சா் சந்திப்பில் ‘யு’ திருப்பம் செய்து, அண்ணா சாலை, டேம்ஸ் சாலை வழியாகச் செல்லலாம்.

அண்ணா சாலை - வாலாஜா சந்திப்பு - அண்ணா சிலையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வழக்கம்போல் ஜி.பி. சாலையில் அனுமதிக்கப்பட்டு, ராயப்பேட்டை மணிக் கூண்டு வழியாக செல்லலாம்.

ஸ்பென்சா் சந்திப்பில் இருந்து ஜி.பி. சாலையை நோக்கி வரும் வாகனங்கள், டேம்ஸ் சாலை, பிளாக்கா்ஸ் சாலை வழியாகச் சென்று ஜி.பி. சாலையை அடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments