முகப்பு
தமிழ்நாடு

கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

கோவை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று அதிகாலை தொடங்கியது.

Updated On : 27 டிசம்பர் 2023, 11:41 am IST
பகிர்:

கோவை: கோவை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று அதிகாலை தொடங்கியது.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள் நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் சென்னை - கோவை, சென்னை- திருநெல்வேலி, சென்னை-மைசூரு ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தொழில் நகரங்களான கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என தொழில் அமைப்புகள், ரயில் பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.

Advertisement

Advertisement

இதையடுத்து தெற்கு ரயில்வே சாா்பில் கோவை-பெங்களூரு இடையே டிசம்பா் 30 ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை, பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலமாகத் தொடங்கிவைக்க உள்ளாா்.

இந்த நிலையில், கோவை ரயில் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 5 மணிக்கு பெங்களூருக்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது. திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு காலை 11.30 மணியளவில் சென்றடைந்தது.

மீண்டும் பிற்பகல் 1.40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் ரயில் கோவைக்கு இரவு 8 மணியளவில் வந்தடையும்.

இந்த வந்தே பாரத் ரயிலில் ஒரு சொகுசுப் பெட்டி, 7 சாதாரணப் பெட்டிகள் என மொத்தம் 8 பெட்டிகள் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments