சரத் யாதவின் உடலுக்கு திமுக சார்பில் டி.ஆர்.பாலு நேரில் மரியாதை
மத்திய முன்னாள் அமைச்சர் சரத் யாதவின் உடலுக்கு திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு நேரில் மரியாதை செலுத்தினார்.
மத்திய முன்னாள் அமைச்சர் சரத் யாதவின் உடலுக்கு திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு நேரில் மரியாதை செலுத்தினார்.
மத்திய முன்னாள் அமைச்சரும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் (75) உடல்நலக்குறைவு காரணமாக குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு காலமானாா். சரத் யாதவ் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க- சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று சரத் யாதவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சரத் யாதவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் தில்லி சத்தர்பூரில் உள்ள அவரது இல்லத்தில் சரத் யாதவின் உடலுக்கு, திமுக சார்பில் அதன் பொருளார் டி.ஆர். பாலு நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.