அரைமணி நேரம் நாட்டைக் கொடுங்கள்! ..மணிப்பூர் வன்முறையை நிறுத்துகிறேன்!
நாட்டை ஆளும் அதிகாரத்தை அரைமணிநேரம் கொடுத்தால், மணிப்பூர் வன்முறையை நிறுத்திக்காட்டுகிறேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாட்டை ஆளும் அதிகாரத்தை அரைமணிநேரம் கொடுத்தால், மணிப்பூர் வன்முறையை நிறுத்திக்காட்டுகிறேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், காஷ்மீரில் என்ன நடந்ததோ, அதற்கு முன்பு ஈழத்தில் என்ன நடந்ததோ அதுதான் தற்போது மணிப்பூரில் நடக்கிறது.
தற்போது பழங்குடியின மக்கள் கிறிஸ்தவர்களாக உள்ளனர். மைத்தேயி மக்கள் உயர்ஜாதி இந்துக்களாக உள்ளனர். பழங்குடியினர் காடுகளில் உள்ளனர். மைத்தேயி மக்கள் பாஜக ஓட்டுகளாக கீழ்பகுதியில் உள்ளனர்.
படிக்க | முதல்வர் ஸ்டாலின் இடத்தில் நான் இருந்திருந்தால்..! ஜார்க்கண்ட் ஆளுநர்
Advertisement
Advertisement
மணிப்பூரில் பழங்குடி மக்களை வெளியேற்றி கனிம வளங்களை எடுக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இதனால், மணிப்பூர் மக்களை அரசு மோதவிடுகிறது. லட்சக்கணக்கான மக்களை வெளியேற்றிவிட்டனர். நாட்டைக் கொடுங்கள் அரை மணிநேரத்தில் மணிப்பூர் கலவரத்தை நிறுத்துகிறேன்.
மணிப்பூரில் இருவேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து கலவரம் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.