சென்னை, 13 மாவட்டங்களில் பகல் 1 வரை மழை தொடரும்!
தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது. அடுத்த 3 நாள்கள் கனமழை தொடரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மேட்டுபாளையம் - உதகை சாலையில் போக்குவரத்து துண்டிப்பு!
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கரூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று பகல் 1 மணிவரை மிதமான மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.