முகப்பு
தமிழ்நாடு

ஜன. 10 முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்: தமிழக அரசு

பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜனவரி 10 முதல் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழகரசு தெரிவித்துள்ளது. 

Updated On : 6 ஜனவரி 2024, 1:18 pm IST
பொங்கல் பரிசுத்தொகுப்பு நாளை முதல் டோக்கன்
பகிர்:

பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜனவரி 10 முதல் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழகரசு தெரிவித்துள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கமும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், இதற்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் ஜன.13 வரை விநியோகிக்கப்படுகிறது. ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பினை ஜனவரி 10 முதல் 13 வரை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். 

Advertisement

ஜனவரி 13-க்குள் பொங்கல் தொகுப்பைப் பெற முடியாதவர்கள் ஜன.14இல் பெற்றுக் கொள்ளலாம். 

சர்க்கரை அட்டை, பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர மற்ற அட்டைதார்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.