நெல்லையில் தேசியக்கொடிக்கு காந்திமதி யானை மரியாதை!
குடியரசு நாள் விழாவையொட்டி, திருநெல்வேலியில் கோயில் யானை காந்திமதி தனது துதிக்கையை உயர்த்தி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது.
திருநெல்வேலி: குடியரசு நாள் விழாவையொட்டி, திருநெல்வேலியில் கோயில் யானை காந்திமதி தனது துதிக்கையை உயர்த்தி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது.
குடியரசு நாள் விழா நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நுழைவாயில் பகுதியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
இதையும் படிக்க | நீதிபதி பி.பி.வராலே பதவியேற்பு: முழு பலத்தை எட்டியது உச்சநீதிமன்றம்
Advertisement
Advertisement
கோயில் செயல்அலுவலர் அய்யர் சிவமணி, இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.
அப்போது கோயில் யானை காந்திமதி தனது துதிக்கையை உயர்த்தி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.