கடலுக்குச் செல்ல வேண்டாம்: தூத்துக்குடி மீனவர்களுக்கு எச்சரிக்கை!
தூத்துக்குடி மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஏப். 10, 11) கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்குச் செல்வார்கள் என்பதால், மீன்வளத்துறை எச்சரிக்கை முன்கூட்டியே மீனவர்களுக்கு விடுத்துள்ளது.