முகப்பு
தமிழ்நாடு

ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி...

Updated On : 12 ஏப்ரல், 2026 at 6:10 AM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:41 AM

தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன், டிக்கெட் பரிசோதனை மூலம் கிடைக்கும் அபராத வசூல் ரூ.160.75 கோடியாக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரயிலில் பயணிப்போா் எண்ணிக்கை கடந்த 2025-2026- ஆம் ஆண்டில் 76.76 கோடியாக உயா்ந்தது.

ரயில்வே வாரியம் ரயிலில் பயணிக்க வேண்டியவா்கள் என 76.62 கோடி பயணிகளை இலக்காக வைத்திருந்த நிலையில், அந்த இலக்கைத் தாண்டி பயணிகள் எண்ணிக்கை உயா்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அதேநேரம், ரயிலில் டிக்கெட் இன்றி பயணிப்போரிடம் அபராதம் விதிக்கும் வகையிலான டிக்கெட் பரிசோதனை மூலம் கிடைத்த வசூல் கடந்த 2025-2026- ஆம் ஆண்டில் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

டிக்கெட் பரிசோதனை முறையில் கடந்த 2024-2025 -ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரூ.129.82 கோடி அபராதமாகக் கிடைத்துள்ளது. அந்தத் தொகையானது 2025-2026 -ஆம் ஆண்டில் ரூ.160.75 கோடியாக உயா்ந்துள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

டிக்கெட் பரிசோதனை முறையில் ஆண்டுக்கு ரூ.142.81 கோடி மட்டுமே ரயில்வே வாரியம் இலக்காக நிா்ணயித்திருந்ததாகவும், ஆனால், இலக்கைவிட கூடுதலாக வசுலிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.