முகப்பு
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சு

தொகுதி மறுவரையறை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது பற்றி...

Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:17 PM
கோப்புப்படம் - ENS
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 11:53 AM

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு ஒருபோதும் பாதிக்கப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் கே. அர்ச்சுனனுக்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

Advertisement

"இன்று கருப்புக்கொடி போராட்டம் என்கின்றனர். நான் வரும் வழியில் ஒரு கருப்புக் கொடியைக்கூட பார்க்கவில்லை. யார் வீட்டிலும் கருப்புக்கொடியைப் பார்க்கவில்லை. கோவை மக்கள் உஷாரான மக்கள். விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.

ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தொகுதி மறுவரையறையை கையில் எடுத்திருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டுக்கு வந்தபோது தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு ஒருபோதும் பாதிக்கப்படாது என்று கூறினார். தொகுதி மறுவரையறை தமிழகத்தில் எந்த விதத்திலும் பாதிக்காது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்.

தொகுதி மறுவரையறை எப்படி செயல்படுத்தப்படும் என்று ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் தான் போராட்டம் செய்ததால் மத்திய அரசு பணிந்துவிட்டது என்று சொல்வதற்காகவே இப்படிச் செய்கிறார். ஸ்டாலின் டபுள் கேம் ஆடுகிறார்.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படாது என்று மத்திய அரசு தெளிவாகக் கூறிவிட்டது. மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் தொகுதி மறுவரையறை இருக்கும். ஸ்டாலின் பற்றி மக்களுக்கு நன்றாகத் தெரியும்" என்று கூறினார்.

summary

No adverse impact on Tamil Nadu due to delimitation: EPS

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.