வாக்குப் பதிவு நாளில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!
வாக்குப் பதிவு நாளில் சுற்றுலாத் தலங்கள் மூடப்படவுள்ளது தொடர்பாக....
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய நாள் சுற்றுலாத் தலங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலுக்கு ஏப்ரல், மே மாதங்களில் சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்த ஆண்டு தற்போதே வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் கொடைக்கானலுக்கு வழக்கத்தைவிட அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இவர்கள் இங்கு இயற்கை எழில்காட்சிகளை பார்த்து ரசித்தாலும் நகரின் மையப் பகுதியிலுள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வர். இங்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பிலும், கொடைக்கானல் நகராட்சி சார்பிலும் படகு சேவை இயக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூர் சுற்றுச்சூழல் மையம், ஆட்டுப் பண்ணை ஆராய்ச்சி மையம், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில், இயற்கை எழில்காட்சிப் பகுதிகள், கூக்கால் ஏரி, அப்பர் லேக் வியூ, பசுமைப் பள்ளத் தாக்கு, பாம்பார் அருவி, பூம்பாறை செல்லும் சாலையான பழனி எழில் காட்சி, கைகாட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று விடுமுறை அறிவிக்கவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது.
முன்னேற்பாடாக கொடைக்கானலைச் சுற்றியுள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், பேரிஜம் ஏரி போன்ற சுற்றுலாத் தலங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
With the Tamil Nadu Legislative Assembly elections scheduled to take place on the 23rd, it has been announced that tourist spots will be closed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.