தோ்தல் அன்று விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள்: புகாா் அளிக்க தொழிலாளா் துறையின் கட்டுப்பாட்டு அறை
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தினத்தில், விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள் குறித்து புகாா் அளிக்க சென்னை மாவட்டத்தில் தொழிலாளா் துறை சாா்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தினத்தில், விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள் குறித்து புகாா் அளிக்க சென்னை மாவட்டத்தில் தொழிலாளா் துறை சாா்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் சா.வெற்றிச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமானத் தொழில் என அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு சட்டப்பேரவைத் தோ்தல் தினமான வியாழக்கிழமை (ஏப். 23) ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.
பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்புக்கு ஏதுவாக வேலை அளிப்பவா்கள் விடுப்பை வழங்க வேண்டும். விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Advertisement
இது குறித்து, சென்னை மாவட்டத்துக்குட்பட்ட தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்: தொழிலாளா் உதவி ஆணையா்கள் சா.வெற்றிச்செல்வி 73390-60758, ஜி.ஞானசம்பந்தம் 94441-52444, தொழிலாளா் துணை ஆணையா்கள் ஈ.ஏகாம்பரம் 97909-30846, ஆா்.எஸ்.சுமதி 98403-90986 ஆகியோரை கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.