முகப்பு
தமிழ்நாடு

கழுதைகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

வாக்குப்பதிவு மையங்களுக்கு கழுதைகள் மூலம் அனுப்பி வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

Updated On : 22 ஏப்ரல் 2026, 6:41 pm IST
கழுதைகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்! - படம்: எக்ஸ்/ இந்திய தேர்தல் ஆணையம்
பகிர்:

மலைக் கிராமங்களில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட போடி சட்டப்பேரவைத் தொகுதியில் கொட்டகுடி, குரங்கனி, கொழுக்குமலை, சென்ட்ரல் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாலை வசதி இல்லாததால், வாக்குச் சாவடி மையத்துக்கு வாக்குப் பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

Advertisement

Advertisement

வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் மீண்டும் கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கீழே கொண்டு வரப்படவுள்ளது.

போடி பேரவைத் தொகுதியில் சென்ட்ரல் மலைக் கிராமத்தில் 55 வாக்காளர்களுக்காக தனி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போடி அருகே உள்ள மலைக் கிராமங்களுக்கு கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

summary

Voting machines were transported by donkeys to polling stations located in hill villages and installed there.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.