சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்!
சென்னை எழும்பூர் - சேலம் செல்லும் விரைவு ரயில் சேவையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...
சென்னை எழும்பூரில் இருந்து இன்று (ஏப். 28) இரவு சேலம் செல்ல இருந்த விரைவு ரயில் நாளை (ஏப். 29) காலை செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் தாமதமாகப் புறப்படவுள்ளது.
சென்னை எழும்பூர் - சேலம் சந்திப்பு செல்லும் விரைவு ரயில் (22153), இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நாளை (ஏப். 29) காலை 6.30 மணிக்கு மாற்றப்பட்டது.
தற்போது, அதன் இணை ரயில் தாமதமாக வருவதன் காரணமாக, அந்த ரயில் நாளை (ஏப். 29) காலை 6.30 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
முன்னதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஹவுரா செல்லும் விரைவு ரயில் இன்று இரவு 7 மணிக்குச் செல்லவிருந்த நிலையில், 2 மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.