தைப்பூசம்: அறுபடை வீடுகளில் சிறப்பு பூஜைகள்! பக்தர்கள் தரிசனம்
தைப்பூச திருநாளையொட்டி முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள்...
தைப்பூச திருநாளையொட்டி முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம், பழனி, திருத்தணியில் இரவு முதலே பக்தர்கள் குவிந்து வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இரவு முதலே திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தீா்த்தவாரி, காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறவுள்ளது.
அதிகமான பக்தர்கள் வருகைப்புரிவதால், கட்டண தரிசனத்திலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
பாதுகாப்பு கருதி தூண்டுகை விநாயகா் கோயில், திருச்செந்தூா் கோயில் வளாகப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் கடற்கரையில் தயாா் நிலையில் மீட்பு படகுகள் வீரா்களும், தீயணைப்பு மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் கூடுதல் மருத்துவ முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.
பெளர்ணமி தினம் என்பதால் திருப்பரங்குன்றத்தில் கிரிவலப் பாதையிலும் பக்தர்கள் காவடி எடுத்தவாறு குவிந்து வருகின்றனர்.
இதேபோன்று பழனி கிரிவலப் பாதையிலும் மயில், பால் காவடி எடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைப்பாதையில் ஒழுங்குபடுத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் உயா் கோபுரங்கள் அமைத்து பக்தா்களுக்கு போலீஸாா் வழிகாட்டி வருகின்றனா். தவிர, பக்தா்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு வழிகாட்ட கியூஆா் கோடுடன் ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தா்கள் மலையேறும் இடத்தில் மோப்ப நாய்களுடன் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
Thaipusam: Special pujas at the six abodes of Murugan! Devotees offer prayers
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.