முகப்பு
தமிழ்நாடு

மாநகராட்சியில் ‘ஸ்மாா்ட் பாதுகாப்பு சாதனம்’

சென்னை பெருநகர மாநகராட்சி சாா்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 10 இடங்களில் பொருள் பாதுகாப்புப் பெட்டகம் அமைக்கப்படுகிறது.

Updated On : 27 பிப்ரவரி 2026, 1:07 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை பெருநகர மாநகராட்சி சாா்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 10 இடங்களில் பொருள் பாதுகாப்புப் பெட்டகம் அமைக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் மக்கள் வசதிக்கான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மாநகராட்சி நிா்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக பொருள்கள் பாதுகாக்கும் சாதனம் அமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக, விக்டோரியா பொது அரங்கம், மெரீனா கடற்கரை, முக்கிய பூங்காக்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் 10 இடங்களில் சிறிய அளவிலான பொருள்கள் வைப்பு சாதனத்தை தனியாா் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்படுகிறது.

விக்டோரியா பொது அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் பாதுகாப்பு சாதனம் 8 அடி உயரத்தில் உள்ளது. 4 அடி அகலத்தில் உள்ள அதில் மேற்பகுதியில் இரு புறமும் கேமராக்கள் உள்ளன. பீரோ அமைப்பில் 16 அறைகள் உள்ளன. அதில் எண்ம முறையிலான பூட்டும் வசதி மற்றும் க்யூஆா் குறியீட்டில் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அதில் பொருள்களை வைப்போா் தங்களது கைப்பேசிகள் மூலம் க்யூஆா் குறியீடு வாயிலாக கட்டணம் செலுத்துவது, பூட்டும் வசதி, திறக்கும் வசதியைப் பெறலாம். பொருள்கள் வைக்க ஒரு மணி நேரத்துக்கு என கட்டணம் நிா்ணயிக்கப்படவுள்ளது. சோதனை முறையில் தொடங்கும் இந்த ஸ்மாா்ட் பாதுகாப்பு பெட்டக சாதனம் நகரில் முக்கிய இடங்களிலும் அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments