தாம்பரம் - விழுப்புரம் ‘மெமு’ ரயில் 3 நாள்கள் பகுதி ரத்து
தாம்பரம் - விழுப்புரம் இடையேயான ‘மெமு’ ரயில் வரும் ஜூன் 13, 17, 20 ஆகிய 3 நாள்கள் பகுதி ரத்து செய்யப்படும்.
தாம்பரம் - விழுப்புரம் இடையேயான ‘மெமு’ ரயில் வரும் ஜூன் 13, 17, 20 ஆகிய 3 நாள்கள் பகுதி ரத்து செய்யப்படும்.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி ரயில்வே கோட்டத்தில் தண்டவாளம், தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனையடுத்து குறிப்பிட்ட ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இதனால், வரும் ஜூன் 13, 17, 20 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.40 மணிக்குப் புறப்படும் மெமு ரயில் விழுப்புரம் செல்வதுக்குப் பதிலாக முண்டியம்பாக்கம் நிலையம் வரை இயக்கப்படும்.
மறு மாா்க்கத்தில் அந்த நாள்களில் விழுப்புரத்துக்குப் பதிலாக முண்டியம்பாக்கத்தில் பிற்பகல் 1.37 மணிக்குப் புறப்படும் ரயில் சென்னை கடற்கரையை வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.