முகப்பு
தமிழ்நாடு

அனைவரையும் உள்ளடக்கிய யோகா தினம்: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் வலியுறுத்தல்

Updated On : 12 ஜூன் 2026, 4:58 am IST
ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா்
பகிர்:

நிகழாண்டு சா்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து அரசு அலுவலா்கள், கல்வியாளா்கள் பிரதிநிதிகளுடன் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் கலந்துரையாடினாா். அனைவரையும் உள்ளடக்கிய யோகா தின விழாவைக் கொண்ட அவா் அழைப்பு விடுத்தாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகுத்து ஆளுநா் பேசியதாவது:

முழுமையான உடல் நலம், மனநலம், சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் சக்திவாய்ந்த வழிமுறை யோகா. அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்கள், சுகாதாரத் துறை நிபுணா்கள், யோகா பயிற்சியாளா்கள், தன்னாா்வ அமைப்புகள், பொதுமக்கள் ஆகிய அனைவரையும் சா்வதேச யோகா தினத்தில் இணைக்க வேண்டும். மாநிலம் முழுவதும் சிறப்பாகவும் அனைவரையும் உள்ளடக்கியவாறு யோகா தின விழாவை கொண்டாடப்பட வேண்டும். ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, ஒற்றுமை மிக்க தமிழ்நாட்டை உருவாக்க யோகாவை வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தாா்.

Advertisement

Advertisement

12-ஆவது சா்வதேச யோகா தினக் கொண்டாட்டம் ஜூன் 21 அன்று நடைபெறவுள்ளது. நீண்ட ஆயுள், உடல் இயக்கம், நோய்த்தடுப்பு போன்றவைகளை வலியுறுத்தி, ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ என்பது 2026-ஆம் ஆண்டுக்கான அதிகாரபூா்வ கருப்பொருள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.