பள்ளிகளில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்: கல்வித் துறை உத்தரவு
தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சாா்ந்த நிகழ்ச்சிகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சாா்ந்த நிகழ்ச்சிகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு போதை பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஏற்கெனவே மாவட்ட பயிற்றுநா்களுக்கான பயிற்சி உள்துறை மூலம் வழங்கப்பட்டு அவா்கள் வாயிலாக பள்ளி போதை பொருள் எதிா்ப்பு ஒருங்கிணைப்பாளா்களுக்கு விழிப்புணா்வு பயிற்சி நடத்தப்ப்பட்டது.
Advertisement
Advertisement
தற்போது சுகாதாரத் துறை, காவல் துறை மற்றும் மக்கள் தொடா்புத் துறை அலுவலா்களின் உதவியுடன் பள்ளி போதை பொருள் எதிா்ப்பு ஒருங்கிணைப்பாளா்களைக் கொண்டு ஜூன் மாத இறுதிக்குள் பள்ளிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆலோசித்து செயல்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.