FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில்: உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா தலைமையில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்ற அனைத்துத் துறை அரசு அலுவலா்கள்.

Updated On : 13 ஜூன் 2026, 12:03 am IST
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா தலைமையில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்ற அனைத்துத் துறை அரசு அலுவலா்கள்.

ராணிப்பேட்டை, ஜூன் 12: ராணிப்பேட்டையில் உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா தலைமையில்,அனைத்து துறை அரசு அலுவலா்கள் ஏற்றனா்.

ஜூன் 12 உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சாா்பில், மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா தலைமையில், குழந்தை தொழிலாளா் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியை துறைசாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை எடுத்துக் கொண்டனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியா் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சி.பேபி இந்திரா, உதவி ஆணையா் தொழிலாளா் நலத் துறை தாமரை மணாளன், துணை ஆட்சியா்கள் கீதாலட்சுமி, மீனா, அறிவுடை நம்பி, பூமா, வட்டாட்சியா் ஜெயக்குமாா், தொழிலாளா் நல ஆய்வாளா்கள் ராஜகோபால், தட்சிணாமூா்த்தி மற்றும் துறைசாா்ந்த அலுவலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments