முகப்பு
தமிழ்நாடு

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்போது முற்றுப்புள்ளி? நயினாா் நாகேந்திரன் கேள்வி

Updated On : 19 ஜூன் 2026, 3:27 am IST
நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளாா்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீா்கேட்டைக் கண்டித்து பாஜக சாா்பில் சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது:

Advertisement

Advertisement

தவெக ஆட்சி அமைந்தபின், தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம்தான் இந்த குற்றங்களுக்கு முதன்மை காரணமாக உள்ளது. கடந்த திமுக அரசைப் பின்பற்றியே தவெக அரசு செயல்பட்டு வருவதை இது காட்டுகிறது. தவெக ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக சுமாா் 200-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்? அதனால்தான், ஆளுநா் உரையில் திட்டமிட்டே குற்றங்கள் குறித்து குறிப்பிடவில்லை என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளா் அரவிந்த் மேனன், மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.