சர்வதேச யோகா நாள்: 1,000-க்கும் மேற்பட்டோருடன் யோகா செய்த புதுச்சேரி முதல்வர்
12-வது சர்வதேச யோகா நாளையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற யோகா நிகழ்வில் துணைநிலை ஆளுநர், முதல்வர் உட்பட 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களைச் செய்தனர்.
12-வது சர்வதேச யோகா நாளையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற யோகா நிகழ்வில் துணைநிலை ஆளுநர், முதல்வர் உட்பட 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களைச் செய்தனர்.
புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை, ஆயுஷ் இயக்குநரகம், பள்ளிக் கல்வித் துறை, உயர் மற்றும் தொழில்நுட்பக்கல்வி ஆகிய துறைகள் இணைந்து 12-வது சர்வதேச யோகா தின விழா புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைபெற்றது.
இதில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு யோகா தின விழாவை துவக்கி வைத்தனர்.
Advertisement
Advertisement
தொடர்ந்து நடைபெற்ற யோகா விழாவில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், அவரது மனைவி, தலைமை செயலர் சரத் சௌகான், காவல் துறையின் தலைவர் ஷாலினி சிங், அமைச்சர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர் சாய் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகாசன பயிற்சி செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் யோகாசன நிகழ்வில் பங்கேற்றனர்.