யார் நல்லது செய்தாலும் பாராட்டும் தாயுள்ளம் கொண்டவர் பாக்யராஜ்: அமைச்சர் ராஜ்மோகன்
இயக்குநர் பாக்யராஜ் மறைவு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் பேசியது பற்றி...
யார் நல்லது செய்தாலும் பாராட்டும் தாயுள்ளம் கொண்டவர் இயக்குநர் பாக்யராஜ் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சனிக்கிழமை (ஜூன் 27) பேசியுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராகவும்ம், நடிகரகவும் இருந்த கே. பாக்யராஜ் (73 வயது) இன்று காலை மாரடைப்பால் காலமானார். இந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
Advertisement
Advertisement
இயக்குநர் கே. பாக்யராஜ் மறைந்த செய்தி கேட்டு நிலைகுலைந்து போனேன். இரண்டு நாள்களுக்கு முன்பு அலைபேசியில் அழைப்பு விடுத்து நன்றாகப் பேசூகிறீர்கள் தம்பி என்றார். அரசியல் வேறுபாடின்றி யார் நல்லது செய்தாலும் அதனை பாராட்டும் தாயுள்ளம் கொண்டவர். கலையுலகில் தனக்கென முத்திரை பதித்த மாபெரும் கலைஞன். தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கலையுலகத்துக்கே இது மாபெரும் பேரிழப்பு.
குருநாதரை (பாரதிராஜா) இழந்த துக்கத்திலிருந்தே இன்னும் மீண்டு வரவில்லை. அதற்குள்ளாகவே அவரது சீடரை (பாக்யராஜ்) இழந்துள்ளோம். இந்தத் துக்கத்தில் அவரது குடும்பத்துடன் நாங்களும் பங்கேற்கிறோம். அவரது குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும். அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று ராஜ்மோகன் கூறியுள்ளார்.
School Education Minister Rajmohan stated on Saturday (June 27) that Director Bhagyaraj possesses a motherly heart that appreciates anyone who does good.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.