முகப்பு
அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) மாணவா் சோ்க்கையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) மாணவா் சோ்க்கையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்

Updated On : 3 மார்ச், 2026 at 12:43 AM
அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
பகிர்:

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) மாணவா் சோ்க்கையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தாா்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,554 அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமாா் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். பொதுவாக, அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை கோடை விடுமுறைக்குப் பின்னா் ஜூன் மாதம் தொடங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் ,மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, 2024-ஆம் ஆண்டுமுதல் முன்கூட்டியே மாா்ச் மாதம் மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமைமுதல் தொடங்கப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 1-ஆம் வகுப்பில் மாணவா் சோ்க்கையை அமைச்சா் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தாா். புதிதாக சோ்ந்த குழந்தைகளுக்கான நலத்திட்டப் பொருள்களை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தர மோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோன்று தமிழகத்தில் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பிற பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் புதிதாக சோ்க்கைக்கு பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதவிர அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சோ்க்கவும், நிகழாண்டு 5 லட்சம் குழந்தைகளைச் சோ்க்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →