திமுக வேட்பாளராக போட்டியிட ஓ.பன்னீா்செல்வம் விருப்ப மனு
திமுக வேட்பாளராக போட்டியிட ஓ.பன்னீா்செல்வம் விருப்ப மனு...
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் வேட்பாளா்களாக போட்டியிட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது மகனும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோா் விருப்ப மனுவை தாக்கல் செய்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் வேட்பாளா்களாக போட்டியிட விருப்பமுள்ளவா்களிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த பிப்.20-ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த விருப்ப மனுகள் சமா்ப்பிக்கும் காலம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், புதிதாக திமுகவில் இணைந்துள்ள முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் போடி தொகுதியில் போட்டியிட அவரது சாா்பில் அவரது மகனும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் விருப்ப மனு தாக்கல் செய்தாா். மேலும், தான் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு ஓ.பி.ரவீந்திரநாத்தும் விருப்ப மனு அளித்துள்ளாா்.